உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 குச்சிராசன் என்னும் பட்டங்கள் வழங்கினான் என்றும் அப்புதல்வர் களுக்குரிய இயற்பெயர்கள் இவை யென்றும் திருமழ பாடியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. அப்பெயர் களுள், இராசமகேந்திரன் என்னும் பெயர் காணப்படாமையே, அப்பெயருடைய அரசகுமாரன் இராசேந்திரனுடைய புதல்வன் அல்லன் என்பதை ஒருதலையாக வலியுறுத்தல் அறியத்தக்கது. இரண்டாம் இராசேந்திரன் தன் முதற்புதல்வனுக்கு உத்தம சோழன் என்னும் பட்டம் வழங்கினான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றனவேயன்றி இராசமகேந்திரன் என்னும் பட்டம் வழங்கினான் என்று யாண்டும் கூறவில்லை. எனவே, இராச மகேந்திரன் என்பான் இரண்டாம் இராசேந்திரன் மகன் அல்லன் என்பதும் தம்பியேயாவன் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.

இனி, 'மனுவினுக்கு மும்முடி நான்மடியாஞ் சோழன்' என்ற கலிங்கத்துப்பரணிப் பாடலும் ‘தருமநெறி நிற்ப மனு நெறி நடத்திய கோவிராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ ராசமகேந்திரதேவர்' என்ற கல்வெட்டுப் பகுதியும் அவன் செங்கோற் சிறப்பையும் நீதி மாண்பினையும் தெற்றென விளக்கி நிற்றல் அறியற்பாலதாம். அவன் இளவரசனாய் இருந்த போதே இறந்தனன் என்று தெரிகிறது.

நம் இராசேந்திரனுக்கும் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது என்பது திருமழபாடி முதலான ஊர் களிலுள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இவனுக்கு மனைவியர் சிலர் இருந்துள்ளனர். அவர்களுள் கிழானடிகள், திரைலோக்கிய முடையாள்" என்ற இருவரைத்தவிர மற்றை யோர் பெயர்கள் தெரியவில்லை. இவனுக்குப் புதல்வர்கள் அறுவர் இருந்தனர். அவர்கள், இராசேந்திர சோழன், முகைய விழலங்கல் முடிகொண்ட சோழன், சோழ கேரளன், கடாரங் காண்ட சோழன், படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட

1. S. I. I., Vol. V, No. 644.

2. Ibid, No. 647.

3. Ibid.

4. T.A.S., Vol. I, page 165. 5.S. I. I., Vol. V, No. 512.