உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

209

வீரராசேந்திரனுக்குத் திறை செலுத்திய சேர மன்னர்கள் யாவர் என்பது இப்போது தெரியவில்லை. அன்னோர் சோழர்க்கு அடங்கிய குறுநில மன்னராயிருந்து பின்னர் முரண்பட்டவ ராதல் வேண்டும். அது பற்றியே வீரராசேந்திரன் அவர்கள் நாட்டின்மேல் படையெடுத்துச் செல்லவேண்டியது இன்றி யமையாததாயிற்று எனலாம்.

இனி, இவ்வேந்தன் ஆகவமல்லனோடு நான்காம் முறை நடத்திய போர் ஆராயற்பாலதாகும். அஃது எவ்விடத்தில் நடைபெற்றது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் கல்வெட்டுக்களின் துணை கொண்டு பார்க்குங்கால், அஃது ஓர் ஆற்றின் பக்கத்தில் கி.பி.1066-ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது. சோழர்க்கும் மேலைச் சளுக்கியர்க்கும் நிகழ்ந்த போர்கள் எல்லாம் பெரும்பாலும் துங்கபத்திரை, கிருஷ்ணை என்னும் பேராறுகளின் பக்கங்களில்தான் நடந்துள்ளன. ஆகவே, நான்காம் மேலைச்சளுக்கியப் போரும் அவ்விரண்டினுள் ஒன்றின் பக்கத்தில்தான் நடைபெற்றதாதல் வேண்டும். அதில் மேலைச்சளுக்கியர் பேரிழப்பிற்கும் பெருந்துன்பத்திற்கும் உள்ளாயினர். சளுக்கிய தண்டநாயகர்களாகிய மல்லியண்ணன், மஞ்சிப்பையன், பிரமதேவன் அசோகையன், சக்தியண்ணன், வீமய்யன், வங்காரன் என்போர் வீரராசேந்திரனால் கொல்லப் பட்டமையோடு கங்கன், நுளம்பன், காடவர்கோன், வைதும் பராயன் என்னும் அரசர்களும் அப்போரில் உயிர்நீத்தனர். அதனை யுணர்ந்த ஆகவமல்லன் பெரிதும் வருந்திப் பழியொடு வாழ்வதினும் சாவது சால நன்று என்றெண்ணி, உள்ளமுடைந்து துன்புறுவானாயினன். பிறகு அவன் ஒருவாறு தேறுதலெய்தி, மறுபடியும் வீரராசேந்திரனோடு போர் புரிந்து தனக்கு நேர்ந்த பெரும் பழியைப் போக்கக் கருதித் தானும் தன் புதல்வரும் முன்னர்த் தோல்வியுற்ற கூடல் சங்கமத்தையே போர்க்களமாகக் கொண்டு தன்னோடு போர் புரிய வரவேண்டும் என்றும், அங்ஙனம் வாராதஞ்சியவர் மன்னவர் அல்லர் என்றும், போர்ப் பெரும் பழிப் புரட்டர் ஆவர் என்றும், ஒரு திருமுகம் எழுதி கி.பி. 1067-ல் கங்காகேத்தன் என்பவனிடம் கொடுத்து