உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

211

2

என்று மைசூர் நாட்டிலுள்ள ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.' அன்றியும் விக்கிரமாங்கதேவ சரிதமும் அவ்வாறே கூறுகின்றது. அஃது உண்மைச் செய்தியாகவும் இருக்கலாம். ஆனால், அந்நிகழ்ச்சி வீரராசேந்திரனுக்குத் தெரியாதன்றோ? அதனால் தான் இவன் பெருங் கோபங்கொண்டு, அவன் பொய்யன் என்றும் புரட்டன் என்றும் கருதி அவனைப்போல் உருவொன்றமைத்து, அதனைப் பல்வகை அவமானங்களுக்கு உட்படுத்தினன் என்க.

அங்ஙனம் ஆகவமல்லன் உயிர்துறந்தபோது அவன் இரண்டாம் புதல்வன் விக்கிரமாதித்தன் என்பான் திக்குவிசயஞ் செய்யப்புறப்பட்டு, வேங்கிநாட்டையும் சக்கரக் கோட்டத் தையும் தன்னடிப்படுத்தி, கிருஷ்ணையாற்றங்கரைக்கு வந்து தங்கியிருந்தான் என்றும் அந்நாட்களில் தன் தந்தை இறந்தமை கேட்டுப் பெரிதும் வருந்தி தான் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை அங்குச் செய்து முடித்தான் என்றும் பில்ஹணர் கூறியுள்ளனர்.' எனவே, ஆகவமல்லன் இறப்பதற்கு முன்னர், கி.பி. 1067-ஆம் ஆண்டில் வேங்கிநாடு விக்கிரமாதித்தனால் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆயினும், அது, நெடுங்காலம் மேலைச் சளுக்கியர் ஆட்சிக்கு உட்பட் டிருக்கவில்லை என்பது அதேயாண்டில் நம் வீரராசேந்திரன், 'தான்' கைக்கொண்ட வேங்கை நன்னாடு-மீட்டுக் கொண்டலால் மீள்கிலம் கேட்டு நீ-வல்லனாகில் வந்து காக்கென்று சொல்லி' விட்டுக் கூடல் சங்கமத்திலிருந்து படையுடன் புறப்பட்டு வேங்கிநாடு நோக்கிச் சென்றான் என்று இவனது கல்வெட்டு ஒன்று கூறுவதால் நன்கறியக் கிடக்கின்றது. அங்ஙனம் வேங்கி நாடு நோக்கிச் சென்ற வீரராசேந்திரனை மேலைச்சளுக்கிய தண்டநாயகர்களாகிய சனநாதன், இராசமய்யன், திப்பரசன் என்போர் படையுடன் வந்து கிருஷ்ணையின் கரையில் தடுத்தனர்.

1. Ep. Ind. Vol. VII. SK. 136.

2. விக்கிரமாங்க தேவசரிதம், அதிகாரம் 4, 44-68.

3. விக்கிரமாங்க தேவசரிதம், அதிகாரங்கள் 3,4.

4. தான் என்றது ஈண்டு ஆகவமல்லனை என்க.

5. S. I. I., Vol. III, No.30.

5