உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

233

காணப்படுகிறதேயன்றிக் குறுநில மன்னர் முதலான ஏனையோர் கல்வெட்டுக்களில் காணப்படாமை குறிப்பிடத்தக்கது.

முதல் இராசராச சோழனுக்கு முன் அரசாண்ட சோழ மன்னர்கள் தம் இயற் பெயர்களோடு தம் வீரச் செயல்களை யுணர்த்தும் அடைமொழிகள் அமைந்த பட்டங் களையும் சேர்த்துக் கல்வெட்டுக்கள் வெளியிட்டுள்ளனர். அவ்வுண்மையை, விசயாலய சோழன் ‘தஞ்சைகொண்ட கோப்பரகேசரிவர்மன்' எனவும், முதல் ஆதித்த சோழன் 'தொண்டை நாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டனான ராசகேசரிவர்மன்' எனவும், முதற் பராந்தக சோழன் 'மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனவும், இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் ‘மதுரை கொண்ட கோ இராசகேசரிவர்மன்’ எனவும், 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்' எனவும், தத்தம் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருத்தலால் நன்கறிந்து கொள்ளலாம். முதல் இராசராச சோழனும் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்களிலே மெய்க் கீர்த்தியின்றிக் 'காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன்' என்றுதான் தன்னைக் குறித்துள்ளனன். எனவே அவனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி. பி. 993-தான் அவன் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தியை முதலில் வரையத் தொடங்கிய காலமாகும். அவ்வாண்டிற்கு முன்னர் அவன் நிகழ்த்திய போர்ச் செயல்கள் எல்லாவற்றையும் நிரலே அமைத்து அம்மெய்க்கீர்த்தி எழுதப்பெற்றிருத்தல் அறியத் தக்கது. ஆண்டுதோறும் நிகழும் அரசனுடைய வீரச் செயல் களும் புகழுக்குரிய பிற செயல்களும் மெய்க்கீர்த்தியில் அவ்வப் போது தவறாமல் சேர்க்கப்பெற்று வந்தமை உணரற் பாலதொன்றாம். ஆகவே அரசனது ஆட்சி யாண்டுகள் மிகுந்து செல்லச் செல்ல, மெய்க்கீர்த்தியும் பெருகிக் கொண்டே போகும் என்பது ஒருதலை. அதனால், ஒரு வேந்தன் ஆட்சியில் எவ்வெவ்வாண்டில் எவ்வெவை நிகழ்ந்தன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அன்றியும், ஒவ்வொரு மன்னனுடைய மெய்க்கீர்த்தியும் வெவ்வேறு மங்கல மொழித் தொடரால் தொடங்கப் பெற்றிருத்தலால் அதில் முதலில்