உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

முன்றாம் விசையினு மேன்றெதிர் பொருது பரிபவந் தீர்வனெனக் கருதிப் பொருபுனற் கூடல் சங்கமத் தாகவ மல்லன்

மக்க ளாகிய விக்கலன் சிங்கண

னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை வென்றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை மன்னருந் தானும் பின்னடுத் திருந்து வடகட லென்ன வகுத்தவத் தானையைக் கடகளி றொன்றாற் கலக்கி யடல்பரிக் கோசலைச் சிங்கனைக் கொடிபட முன்னர்த் தூசிவெங் களிற்றொடுந் துணித்துக் கேசவ தண்ட நாயகன் தார்க்கேத் தரையன்

திண்டிறல் மாரயன் சினப்போத் தரைய

னிரேச்சய னிகல்செய்பொற் கோதைமூ வத்தியென்

றார்த்தடு துப்பி லநேகசா மந்தரைச்

சின்னபின்னஞ் செய்து பின்னை

முதலி யான மதுவண னோட

விரித்த தலையோடு விக்கல னோடச்

செருத்தொழி லழிந்து சிங்கணனோட

அண்ணல் முதலிய அனைவரு மமர்பொரப்

பண்ணிய பகடிழிந் தோட நண்ணிய

ஆகவ மல்லனு மவர்க்கு முன் னோட

வேகவெங் களிற்றினை விலக்கி வாகைகொண்

டங்கவர் தாரமு மவர்குல தனமுஞ்

சங்குந் தொங்கலுந் தாரையும் பேரியும்

வெண்சா மரையு மேக டம்பமும்

சூகரக் கொடியும் மகரதோரணமும்

ஒட்டக நிரையு முலோக சனமும்

புட்பகப் பிடியும் பொருகளிற் றீட்டமும்

பாய்பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி

வீரசிங் காதனம் பார்தொழ வேறி

எழிறர் வுலக முழுதுடை யாளொடும்

விசையமணி மகுட மேய்ந்து எழில் கொள்

தத்துமாப் புரவிப் பொத்தப்பி வேந்தனை

வாரணை வன்கழற் கேரளன் றன்னைத்