உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ஆண்டில் தேவதானமாக நிலம் அளித்தனன் என்றும் அஃது இவன் மகன் முதற்பராந்தக சோழனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் இறையிலியாக அரசாங்க வரிப்புத்தகக் கணக்கில் எழுதப்பட்டதென்றும் கூறுகின்றது'. ஆகவே, ஆதித்தன், தன் ஆட்சியின் இருபத்தொன்றாம் ஆண்டிற்கு முன்னரே அபராஜித வர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றி யிருத்தல் வேண்டும். அபராஜிதவர்மன் கல்வெட்டுக்களும் அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டிற்குப் பிறகு தொண்டை மண்டலத்தில் யாண்டும் காணப்படவில்லை. இதனைக் கூர்ந்து ஆராயுமிடத்து, கி.பி.891-ஆம் ஆண்டிலாதல் அதற்கடுத்த ஆண்டிலாதல் ஆதித்தன் அபராஜிதவர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. யானை மேலிருந்துகொண்டு போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்றான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு உணர்த்துகின்றது. தொண்டைமண்டலத்தை ஆதித்தன் கைப்பற்றிய பின்னர், அபராஜிதவர்மனைப் பற்றிய செய்திகளே கிடைக்கவில்லை. ஆதலின், அக்கல்வெட்டுச் செய்தி ஒருகால் உண்மையா யிருப்பினும் இருக்கலாம்.

இந்நாளில் தில்லைத்தானம் என்று வழங்கும் திருநெய்த் தானத்திலுள்ள இவன் கல்வெட்டொன்று, இவனைத் தொண்டை நாடு பரவின சோழன் இராசகேசரிவர்மன் என்று குறிப்பிடுவதும்4 வன் தொண்டை மண்டலத்தை வென்று தன்னடிப்

படுத்தியதையே உணர்த்துவதாகும்.

1. இப்புரவும் இரவும் பொன்னுந் தேவர்க்கு இறுப்பதாக இக்கோட்டத்துப் புரிசை நாட்டுப் பிரமதேயம் புதுப் பாக்கத்துச் சபையார்க்குத் தேவதான பிரமதேசமாகத் தொண்டை மானாற்றூர்த்துஞ்சின் உடையார்க்கு இருபத்தொன்றாவது கொடுத்து இருபத்திரண்டாவது பிடாகை நடந்து சாசனம் செய்து கொடுத்து வரியிலிடாதே கிடந்த இவ்வூரை மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மருக்கு யாண்டு நாலாவது தேவதான பிரமதேயமாக வரியிலிட்ட இதனால் புரவும் இரவும் பொன்னும் புதுப்பாக்கத்துச் சபையாரே தேவர்க்கு இறுத்துவரா நின்றார்கள். - (S. I. I., Vol. III. No. 142)

2. The Pallavas by G. J. Dubreuil, p.82.

3. Travancore Archaeological Series, Vol. III, No. 34. Verse 55.

4. S. I. I., Vol. III. No. 89.