உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

-

கோப்பரகேசரி வர்மன்' என்று கூறுகின்றமையின் கி.பி.910 - ஆம் ஆண்டில் இவன் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துச் சென்று மதுரையைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அந்நாளில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் என்போன். பராந்தகன் நிகழ்த்திய போரில் அவன் தோல்வியுற்று இலங்கை வேந்தனாகிய ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை யுதவுமாறு வேண்டிக்கொண்டான். இலங்கை வேந்தனும் ராசசிம்மன் வேண்டுகோட்கிணங்கி, சக்க சேனாதிபதியின் தலைமையில் பெரும் படையொன்றைப் பாண்டி நாட்டிற் கனுப்பினான்'. அப்படைப் பெருக்கைக் கண்ட பாண்டி வேந்தன் களிகூர்ந்து, அதன் துணைகொண்டு நாவலந்தீவு முழுமையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முடியும் என்று கூறினான்'. பின்னர், பாண்டிப் படையையும் ஈழப் படையையும் ஒருங்கு சேர்த்துக்கொண்டு இராசசிம்ம பாண்டியன் பராந்தக னோடு போர்புரியப் புறப்பட்டான். வெள்ளூர் என்ற இடத்தில் இரு வேந்தர்க்கும் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில், பராந்தகன் அளவற்ற வீரர்களையும் யானைகளையும் குதிரை களையும் கொன்று குவித்து மீண்டும் மதுரைமாநகரைக் கைப்பற்றினான். பாண்டிப் படையும் இலங்கையிலிருந்து வந்த துணைப்படையும் புறங்காட்டி ஓடின'. இராசசிம்ம பாண்டியன் இம்முறையும் தோல்வியெய்தினான். இச்செய்திகளுள் சிலவற்றை இரண்டாம் பிருதிவிபதியின் உதயேந்திரச் செப்பேடுகளிலும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் காணலாம். இலங்கைப் படைத் தலைவனாகிய சக்கசேனாபதி என்பான் மறுமுறையும் பராந்தக சோழனோடு போர்புரிய முயன்றபோது அவன் ஒருவகை நோயினால் இறந்துபோனான் என்றும் அதனையறிந்த 1. S. I. I Vol. II, No. 76 (Udayendiram Plates, Verse II).

2. The cholas, Vol. I, p. 144.

3. Ibid, p.144 (மகாவம்சக் குறிப்பு)

4. S. I. I Vol. III, No. 99; Ins. 231 of 1926.

5. பராந்தக சோழனது ஆட்சியின் 16 – ஆம் ஆண்டுக் கல்வெட்டு இவனை, மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரி வர்மன், என்று குறிப்பிடுகின்றது. இவன், வெள்ளுர்ப் போரில் ஈழ நாட்டுப் படையையும் வென்று புறங்காட்டியோடச் செய்தமை பற்றி அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது போலும்.