உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

-

43

இராச்சியத்தை இழந்த கோவிந்தனும் தன் மனைவி வீரமாதேவி யோடு தஞ்சைமாநகர்க்கு வந்து தன் மாதுலன் பராந்தக சோழன்பால் தங்கியிருத்தான். அவன் கி. பி. 939 வரையில் சோழ நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பது சில கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது. மூன்றாம் அமோகவர்ஷன் கி. பி. 939 ஆம் ஆண்டின் இறுதியில் இறந்தபோது, இராச்சியத்தை இழந்து தஞ்சைமாநகரில் தங்கியிருந்த கோவிந்தன் தனக்குரிய இரட்ட மண்டலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு அதுவே தக்க காலமென்று கருதித் தன் மாதுலன் துணைகொண்டு முயற்சி செய்தான். எனவே, பராந்தக சோழனது படையும் இரட்ட மண்டலத்திற்குப் போருக்குப் புறப்பட்டது. அமோகவர்ஷன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனுடைய தமக்கையின் கணவனும் கங்க நாட்டு வேந்தனு மாகிய பூதுகன் என்பான், அச்செய்தியை யறிந்து பெரும் படையுடன் கிருஷ்ண தேவனுக்கு உதவிபுரிய வந்தான்'. இரு பகுதியினர்க்கும் இராஷ்டிரகூட நாட்டில் கி.பி. 940-ன் ஆரம்பத்தில் பெரும்போர் நடைபெற்றது. அப்போரில் கோவிந்தனுக்கு உதவிபுரியச் சென்ற சோணாட்டுப் படை தோல்வியுறவே, மூன்றாம் கிருஷ்ணதேவன் வெற்றிபெற்று இராஷ்டிரகூடச் சிங்காதனத்தைக் கைப்பற்றினான்'. அவனது ஆட்சியும் கி. பி. 968 வரையில் இரட்ட மண்டத்தில் நடை பெற்றது என்பது அந்நாட்டில் காணப்படும் அவன் கல்வெட்டுக் களாலும், செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. பராந்தக சோழன் மருகனாகிய நான்காம் கோவிந்தனைப் பற்றிய செய்திகள் அப்போருக்குப் பிறகு கிடைக்கவில்லை. பராந்தக சோழன் தன் மருகன் பொருட்டுச் செய்த முயற்சியின் பயனாக இவனுக்கு மூன்றாம் கிருஷ்ணதேவன் பெரும் பகைவனானான்;

1. Ins. 245 and 246 of 1921.

2. Ep. Ind., Vol. XXVI, Page 164.

3. Ibid, Page 232.

4. கி.பி. 940 முதல் மூன்றாம் கிருஷ்ணன் செப்பேடுகள் அந்நாட்டில் காணப்படுவதால் அவன் வெற்றியெய்தி முடிசூடினான் என்பது நன்கு தெளியப்படும்.

(Deoli Plates of Krishna III; Ep. Ind., Vol. V. No. 20).

5. The Rashtrakutas & Their Times, pp. 117 and 122.