உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

45

தேசுவரம் என்றும் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பதும் ராசாதித்தனுடைய படை வீரர்களும் பணிமக்களும் அக் கோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர் என்பதும் அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக் கின்றன'. ஆகவே, அரசகுமாரனாகிய இராசாதித்தன் தன் தந்தை விரும்பியவாறு அவ்வூரில் சில ஆண்டுகள் தங்கிச் சோழ இராச்சியத்தின் வடபகுதியைக் காத்து வந்தனனாதல் வேண்டும். அந்நாட்களில் தான் அவனுடைய படை வீரர்களும் பணி மக்களும் அக் கோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவ்வூர்க்கண்மையில் பெண்ணை யாற்றங்கரையிலுள்ளதும் இந்நாளில் கிராமம் என்று வழங்கி வருவதும் ஆகிய முடியூரில் இராசாதித்தன் படைத் தலைவனும் சேரநாட்டு நந்திக்கரைப் புத்தூரினனும் ஆகிய வெள்ளங் குமரன் என்பவன் கி. பி. 936 -ஆம் ஆண்டில் தன் படையுடன் தங்கியிருந்தனனென்று அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. அப்படைத் தலைவனே, கி. பி. 943 -ஆம் ஆண்டில் அவ்வூரில் ஆற்றுத்தளி என்ற சிவன் கோயில் ஒன்று எடுப்பித்தான் என்று மற்றொரு கல்வெட்டு அறிவிக்கின்றது". அன்றியும், பராந்தகன் புதல்வருள் ஒருவனும் இராசாதித்தன் தம்பியுமாகிய அரிகுலகேசரி என்னும் அரசகுமாரன் அந்நாட்டில் படையோடு தங்கியிருந்தனன் என்பது திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டுக்களால் புலனாகின்றது'. இவற்றையெல்லாம் ஆராய்ந்துண்மை காணுமிடத்து, வடபுலத்திலிருந்து பகைவர் படையெடுத்து வருதல் கூடும் என்பதைப் பராந்தகன் நன்குணர்ந்து, அதனைத் தடுத்துத் தன் இராச்சியத்தைப் பாதுகாக்கவேண்டியே இத்தகைய ஏற்பாடுகள் செய்திருந்தான் என்பது தெளிவாக விளங்குதல் காண்க. எனினும், காலப்

1. S. I. I., Vol. VII, Nos. 954, 955, 956, 966, 973, 978, 981 and 989.

2. Ins.393 of 1902; Ep. Ind. Vol. VII, pages 134 and 135.

3. Ins. 739 of 1905.

4. Ins. 735 of 1905; Ep. Ind., Vol. VIII, Page 261.

(நடு நாட்டில் திருநாவுக்கரசு அடிகளால் பாடப்பெற்ற திருமுண்டீச்சரம் என்னுந் திருக்கோயில் இதுவேயாம்.)

5. Ins. 280 of 1902; Ep. Ind., Vol. VII, No. 20 E & F.