உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




61

7. அரிஞ்சய சோழன் கி. பி. 956 - 957

கண்டராதித்தனுக்குப் பின்னர் அவன் தம்பியும் ளவரசுப் பட்டங் கட்டப் பெற்றிருந்தவனுமாகிய அரிஞ்சயன் முடிசூட்டப் பெற்றான். இவனை னை அரிந்தமன் அரிந்தமன் என்றும் அரிகுலகேசரி என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது'. இவன் முதற் பராந்தக சோழனுடைய மூன்றாம் புதல்வன்; அவ்வேந்தருக்குக் கேரள அரசனான பழுவேட்டரையன் மகள்பாற் பிறந்தவன்'; பேராற்றல் படைத்த பெருவீரன் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளில் புகழ்ந்துரைக்கப் பெற்றவன்'; பரகேசரி என்ற பட்டமுடையவன். இவன், தன் தமையன் இராசாதித்தன் சோழ இராச்சியத்தின் வடபகுதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு உதவிபுரிதற் பொருட்டு மலைய மானாட்டின் தலைநகராகிய திருக்கோவலூரில் பெரும் படையுடன் தங்கியிருந்தான்". எனவே, சோழர்க்கும் இராஷ்டிர கூடர்க்கும் பராந்தகன் ஆட்சியில் நிகழ்ந்த பெரும் போரில் இவனும் கலந்து கொண்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

இவன் சோழநாட்டில் சக்கரவர்த்தியாக முடிசூடிய பிறகு, தன் தந்தை யாட்சியின் இறுதியில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் கவர்ந்துகொண்ட தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணங்கொண்டு அதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினான். அவ்விரு நாடுகளையும் வென்று, தன்

1. S. I. I., Vol. VI, Nos. 31 and 32; Kanyakumari Inscription of Virarajendra,

Verse 61.

2. Ep. Ind., Vol. XV, No. 5 Verses 22 and 23.

3. Ibid, Vol. XXII, No. 34 and 23.

4. Ibid, Vol. VII, p. 141.