உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் தூரத்திலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமும் அளித் துள்ளனள்'. இவ்வேந்தனுக்குப் பராந்தகன் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். அவன் வைதும்பராயன் மகள் கல்யாணி என்ற அரசியின்பாற் பிறந்தவன் என்பது அன்பிற் செப்பேடுகளால் உணரப்படுகிறது.

இவ்வரிஞ்சயன் பேரனாகிய முதல் இராசராச சோழன், வட ஆர்க்காடு ஜில்லாவில் திருவல்லத்திற்கு வடக்கே ஆறு மைலிலுள்ள மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்னுங் கோயில் ஒன்று எடுப்பித்து அதற்கு நிவந்தங்களும் வழங்கி யுள்ளனன். அக்கோயில் தன் பாட்டனை நினைவு கூர்தற்பொருட்டு முதல் இராசராச சோழன் அமைத்ததாகும். இச்செய்தியை ‘ஆற்றூர்த் துஞ்சின தேவர்க்குப் பள்ளிப் படையாக உடையார் ஸ்ரீ இராசராச தேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின திரு அரிஞ்சிகை ஈசுவரத்து மகாதேவர்" என்னுங் கல்வெட்டுப் பகுதியினால் நன்குணரலாம். அஃது இந்நாளில் சோழேச்சுரம் என்று வழங்குகின்றது; ஆனால் அழிவுற்ற நிலையிலிருப்பது வருந்தத்தக்கது.

1. Ibid, Vol. VIII, No. 626.

2. Ep. Ind., Vol. XV, No. 5; Verse 25. 3.S.I.I.,Vol. III, Nos. 15, 16, and 17. 4. Ibid, No. 15.