உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




65

8. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (கி. பி. 957 - 970)

அரிஞ்சயன் இறந்த பின்னர், அவன் மகன் இரண்டாம் பராந்தகசோழன் கி. பி. 957-இல் சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாக முடிசூட்டப்பெற்றான். இவன், அவ்வேந்தற்கு வைதும்பராயன் மகள்பாற் பிறந்த அரசகுமாரன் ஆவன். பெற்றோர்கள் இவனுக்கிட்ட பெயர் பராந்தகன் என்பதேயாம். இவன் பேரழகுடையவனாயிருந்தமை பற்றிச் சுந்தர சோழன் என்னும் பெயரைப் பின்னர் எய்தினன் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது'.

,3

இவனை, 'மதுரை, கொண்ட கோ இராசகேசரிவர்மன்" எனவும், 'பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீசுந்தர சோழதேவர் எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. புதுக் கோட்டை இராச்சியத்தில் கொடும்பாளூரில் காணப்படுங் கல்வெட்டொன்றில் இவன் ‘மதுராந்தகன் சுந்தர சோழன்4 என்றுங் குறிக்கப்பெற்றுள்ளனன். இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், சுந்தர சோழன், தன் பாட்டனாகிய முதற்பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டிருந்து பிறகு நீங்கிப்போன பாண்டி நாட்டை மீண்டுங் கைப்பற்றும் பொருட்டுப் பாண்டியனோடு போர்புரிந்து வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகிறது.

சுந்தர சோழன் காலத்தில் பாண்டி நாட்டில் மதுரைமா நகரில் வீற்றிருந்து அரசாண்டவன் இராசசிம்ம பாண்டியன் மகனாகிய வீரபாண்டியன் ஆவன். அவனது ஆட்சியின் ஆறாம்

1. Ep. Ind., Vol. XV; No. 5 Verse 26.

2. S.I. I., Vol. III, Nos. 115, 116, 117 and 118. 3. Ep. Ind., Vol. XII, No. 15; Ins. 302 of 1908.

4. Inscriptions of the Pudukkottai State, No. 82.