உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

முதல் இராசராசசோழன் தஞ்சைமாநகரில் எடுப்பித்த ராசராசேச்சுரம் என்னும் பெரிய கோயிலில் குந்தவைப் பிராட்டி, தன் தந்தை சுந்தரசோழன் படிமத்தையும் தாய் வான வன் மாதேவியின் படிமத்தையும் எழுந்தருளுவித்து அவற்றிற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாகப் பெரும் பொருள் வழங்கி யுள்ளமை ஈண்டு அறியற்பாலதாம்'. அன்றியும், அவ்வம்மை, தஞ்சையம்பதியில் தன் தந்தையின் பெயரால் சுந்தரசோழ விண்ணகர் ஆதுரசாலை என்ற மருத்துவ நிலையம் ஒன்று நிறுவி அதனை நடத்திவருவதற்கு மருத்துவக்காணியாக நிலமும் அளித்துள்ளனள்”.

தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள உலகபுரம் என்ற ஊரில் சுந்தரசோழப்பெரும்பள்ளி என்னும் புத்த கோயில் ஒன்றும் எண்ணாயிரம் என்னும் ஊரில் சுந்தர சோழ விண்ணகர் என்ற திருமால்கோயில் ஒன்றும்* வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள பிரமதேசம் என்ற ஊரில் சுந்தரசோழப் பேரேரி என்னும் ஏரி ஒன்றும்‘ புதுக்கோட்டை நாட்டில் திருமெய்யந் தாலுகாவில் சுந்தரசோழபுரம் என்னும் நகரம் ஒன்றும் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. அவை யெல்லாம் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பெற்றனவாதல் வேண்டும். அவற்றுள், சுந்தர சோழபுரம் என்பது இக்காலத்தில் சுந்தரம் என்று வழங்குகின்றது. அவற்றை யெல்லாம் நுண்ணிதின் நோக்குமிடத்து, இவன், தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மக்கட்குப் பல்வகை நலங்களும் புரிந்து புகழுடன் செங்கோல் செலுத்திவந்தான் என்பது இனிது புலனாகும்.

சுந்தரசோழன் ஆளுகையில் துன்பத்தால் 'ஆ' என்று ஓலமிட்டு அரற்றியவர் எவரும் இலர் என்றும் அதற்கு மாறாகச் சிவபெருமானை வணங்குங்கால் மக்கள் கூறிய 'அர' என்ற

1. S.I. I., Vol. II, No. 6.

2. Ins. 248 and 249 of 1923.

3. Ins. 141 of 1919.

4. 3A 335 of 1917.

5. Ins 264 of 1915.

6. Inscriptions of Pudukkottai State, No. 189.