252
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4
தங்கோன் குடைநிழற்கீழ்த் தங்குவித்த வேற்கூத்தன் எங்கோன் மணவிலா ரேறு.
ஐயொருப தாயிரமாம் பூக மதிகையிலே
73
மைவிரவு கண்டர்க்கு வந்தமைத்தான்-வெய்யகலி
போக்கினான் மண்ணைப் பொதுநீக்கித் தங்கோனுக்
காக்கினான் தொண்டையர்கோ னாங்கு.
அராப்புனையும் நம்மதிகை வீரட்டா னர்க்குக்
74
குராற்பசுவைஞ் ஞூறு கொடுத்தான்-பொராப்புறந்தான்
கண்டருக்குத் தான்கொடுத்த காலிங்கன் காசினிக்குத் தண்டருப்போ னின்றளிப்பான் றான்.
வாரி வளஞ்சுரக்க வாழதிகை நாயகருக்
75
கேரியு மூரு மிசைந்தமைத்தான்-போரிற்
கொலைநாடு வெஞ்சினவேற் கூத்தன் குறுகார் மலைநாடு கொண்டபிரான் வந்து.
அம்மா னதிகையிலே யம்பொற் றடமிரண்டும்
76
செம்மா மலரிலகச் செய்தமைத்தான் -கைம்மாவின்
ஈட்டநின்ற வெம்பாமற் கண்டருளென் றீண்டரசர்
காட்டநின்ற வேற்கூத்தன் கண்டு.
அருளா கரநல்லூ ராங்கமைந்த வேரி
77
இருளார் களத்ததிகை யீசன்-அருளாரச்
சென்றமைத்தான் தென்னாடன் சாவேற்றின் றிண்செருக்கை
யன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு.
போதியி னீழற் புனிதற் கிறையிலிசெய்
தாதி யதிகையின்வா யாங்கமைத்தான்-மாதர்முலை
நீடுழக்கா ணாகத்து நேரலரைத் தன்யானைக்
கோடுழக்காண் கூத்தன் குறித்து.
78
மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத்
79
தீசனிடமருங்கி லேந்திழைக்கு-மாசில்
முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளாண்
குடிமுதலான் தொண்டையர் கோன்.
72-78. திருவதிகைக் கல்வெட்டுக்கள்; பெருந்தொகை, பக்கங்கள், 255, 256.