உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

.

2

9

எல்லாம் ஆசிரியர் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது. எனவே, கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்திலிருந்தவன் கடல் சூழ் இலங்கை கயவாகு மன்னன் என்பது நன்கு தெளியப்படும். இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் இரண்டு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது அந்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். அவ்விருவருள் முதல் கயவாகு, கி. பி. 171 முதல் கி. பி. 193 வரையில் அரசாண்டவன்.1 இரண்டாம் கயவாகு என்பான், கி. பி. 1137 முதல் கி. பி. 1153 வரையில் ஆட்சிபுரிந்தவன். இவ்விரண்டாங் கயவாகு சோழ இராச்சியத்தில் இரண்டாங் குலோத்துங்க சோழன் அரசாண்ட காலத்தில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினிடைப் பகுதியில் இருந்தவனாதலின், இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பெற்வன் முதற் கயவாகுவே யாதல்வேண்டும் என்பது நன்கு துணியப்டும். எனவே, அம் முதற் கயவாகுவின் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரைமா நகரில் கடைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அச் சங்கப் புலவர்கள் பல்லவரையாதல் அன்னோர் தமிழகத்தில் நிகழ்த்திய போர்களையாதல் தம் பாடல்களில் யாண்டுங் கூற வில்லை என்பது முன்னர் விளக்கப்பெற்றது. எனவே, அவர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்து அதன் வட பகுதியைக் கைப்பற்றிய காலத்தில் மதுரையம்பதியில் கடைச்சங்கம் இல்லை என்பது தெள்ளிது. பல்லவர் தமிழ் நாட்டிற் புகுந்து ஆட்சி புரியத் தொடங்கிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின்

டைப்பகுதியேயாம் என்பது வரலாற்றாராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து. ஆகவே, மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரையில் கடைச்சங்கம் இல்லை என்றும்

1. The Mahavamsa or the great Chronicle of Ceylon, Translated by Wilhelm Geiger, Ph. D. Intr. p. 38.

2. Epigraphia zeylanica, Vol. III, No. 1A Chronological Table of Ceylon Kings.

3. (a) The Successors of the Satavahanas in Lower Deccan by D. C. Sirkar, p. 175.

(b) The Pallavas by G. J. Dubreuil, p.10.

(c) Administration and Social Life under the Pallavas, pp. 6 &10.