உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

21

பகுதியில் வடமொழியிலும், கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் பிற்காலப் பகுதியில் வடமொழி தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வரையப் பெற்றுள்ளன. ஆகவே, முதற்கால இடைக்காலப் பகுதிகளில் அவ்வேந்தர்கள் பிராகிருதத்தையே தம் அரசாங்க மொழியாகக் கொண்டு வடமொழியைப் பெரிதும் ஆதரித்து அம் மொழிவளர்ச்சியில் தம் கருத்தைச் செலுத்திவந்தனர் எனலாம். அன்னோர் தம் தலைநகராகிய காஞ்சியில் வடமொழியிலுள்ள கலைநூல்களையும் பல்வகைப் பட்ட சமய நூல்களையும் வடபுல மக்களும் வந்து கற்குமாறு ஒரு பெருங்கல்லூரி நிறுவி அதனை நன்கு புரந்துவந்தமை அறியத் தக்கது. காஞ்சிமாநகரில் அரசாங்க ஆதரவில் நிலை பெற்றிருந்த அவ்வடமொழிக் கல்லூரி அந்நாட்களில் ஒரு பெரிய பல்கலைகழகம் போல் விளங்கிக்கொண்டிருந்தது. அங்கு மாணவர்கள் எல்லோரும் உண்டியும் உறையுளும் இலவசமாகப் பெற்று எத்தகைய கவலையுமின்றி வடமொழியில் தாம் விரும்பிய கலை நூல்களைப் பயின்றுவந்தனர். அக்கல்லூரியின் பெருமை வடநாடு முழுமையும் பரவியிருந்தது என்று ஐய மின்றிக் கூறலாம். கடம்பர் குல முதல்வனும் வேதங்களை நன்கு பயின்றவனும் கி. பி. 345 முதல் கி. பி. 370 வரையில் இருந்தவனு மாகிய மயூரசர்மன் என்பான், காஞ்சியிலிருந்த வடமொழிக் கல்லூரியில் படிக்கும் பொருட்டுத் தன் ஆசிரியராகிய வீரசர்மரோடு சென்றான் என்று தாளகுண்டாவிலுள்ள கல்வெட் டொன்று' கூறுகின்றது. பௌத்தர்களால் அமைக்கப் பெற்ற நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் பேராசியராக விளங்கிய தர்மபாலர் என்பவர் காஞ்சியிலிருந்த திக்நாகருடைய மாணவர் ஆவர். இவர், காஞ்சியிலிருந்த வடமொழிக் கல்லூரியில் முதலில் கல்வி பயின்று, பிறகு அப்பல்கலைக் கழகத்திற்குச் சென்று சில ஆண்டுகள் வரையில் அங்குப் படித்து, பின்னர் அக் கழகத்திற்கே தலைவராயினர் என்பது உணரற்பால தொன்றாம்." தொண்டை மண்டலத்தில் சோழ சிங்கபுரத்திற்கு அண்மையிலுள்ள

ம்

1. Eigraphia Indica, Vol. VIII, pp. 24 - 36. Eigraphia Carnatica, Vol. VII, p. 200.

Indian Antiquary, Vol. XXV, p. 27.

2. Administration and Social Life under the Pallavas, p. 225.