உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

23

நகரிலிருந்த வடமொழிக் கல்லூரியில் தத்தம் சமய நூல் களையும் அளவை நூல்களையும் பிற வடமொழி நூல்களையும் நன்கு பயின்று சமயவாதம் புரிவதில் பேராற்றலுடைய வர்களாய் விளங்கிவந்தமையால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய சைவ சமயகுரவராகிய திருநாவுக்கரசு அடிகள் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர்" என்று தம் கச்சித் திருமேற்றளிப் பதிகத்தில் குறிப்பிடுவாராயினர். இரண்டாம் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சியிலிருந்து அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் அவனது ஆட்சியின் இருபத்திரண்டாம் ஆண்டாகிய கி. பி. 458-ல், திருப்பாதிரிப் புலியூர் என்று இக்காலத்தில் வழங்கிவரும் பாடலிபுத்திரத்திலிருந்த ஓர் அமண்பள்ளியில் ‘லோகவிபாகம்’ என்ற திகம்பர சைன நூல் படி எடுக்கப்பெற்றது என்னும் செய்தி அந்நூலில் காணப்படுகின்றது.2 எனவே, அந்நூலின் ஆசிரியர் அவ் வாண்டிற்கு முன்னரே தம் நூலை எழுதி முடித்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிராகிருதத்திலும் வடமொழியிலும் பெரும்புலமை எய்தியிருந்த சிம்மசூரி ரிஷி, சர்வநந்தி என்ற இரண்டு அறிஞர்கள் அவ்வமண் பள்ளியில் தங்கி அவ்விரு மொழிகளையும் பலர்க்கும் கற்பித்து வளர்த்துவந்தமை அறியத்தக்கது. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்துகொண்டிருந்த சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசனுடைய அவைக்களப் புலவராக விளங்கியவர் பாரவி என்னும் வடமொழிப் புலவர் ஆவர்.4 அம் மன்னனால் நன்கு ஆதரிக்கப்பெற்று நல்வாழ்வு பெற்றிருந்த இப்புலவர் தலைவர் வடமொழியில் கிராதார்ச்சுனீயம் முதலான நூல்கள் இயற்றித் தம் புகழையாண்டும் பரப்பியிருத்தல் உணரற் பாலதாம். இச்செய்திகளெல்லாம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டுவந்த பல்லவ அரசர்கள்

1. திருக்கச்சி மேற்றளிப்பதிகம், பா. 8.

3

2. Administration and Social Life under the Pallavas, pp. 227 - 230.

3. Ibid, p. 229.

4. The Pallavas by Mr. R. Gopalan M.A., p. 158.