உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 7.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இலக்கியமும் கல்வெட்டுக்களும்

19

யுள்ளனர். அவன் தன் தந்தையினாட்சியில் இளவரனாகவிருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப் போனான் என்பது தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரந் தாலுகா விலுள்ள உடையார்குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால்' அறியப்படுகின்றது. எனவே அவ்வரசிளங்கோ தன் இளமைப் பருவத்திற் கொலையுண் டிறந்தமை தெள்ளியது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து சிவலோக மெய்தினான் என்று கூறவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில், சிற்றம்பலதைப் பொன்வேய்ந்ததாக நம்பியாண்டார்நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிப்பிட்டுள்ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல்வனும் முதற்பராந்தக சோழன் தந்தையும் கி.பி. 870 முதல் 907 வரையில் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய. முதல் ஆதித்த சோழனே யாவன். இவன் பல்லவ அரசனாகிய அபராசித வர்மனைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக் கைப் பற்றிய காரணம் பற்றித் 'தொண்டைநாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டனாயின ராசகேசரிவர்மன்” என்று வழங்கப்பெற்றுள்ளனன். இவன் ஆட்சியிலேதான் சோழராச்சியம் உயர்நிலையை எய்தியது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக் கொண்டான் என்று 'கொங்கு தேச ராஜாக்கள்' என்னும் வலாற்று நூல் கூறுகின்றது'. ஆகவே, கொங்குநாட்டைக் கைப்பற்றிய இம்மன்னர் பிரான்4 அந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச்சிற்றம் பலத்தைப் பொன்வேய்ந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். இவன் காவிரியாற்றின் இரும ருங்கும் பல சிவாலயாங்களைக் கற்றளிகாளக அமைத்த சிவ பக்தன் என்று அன்பிற் செப்பேடுகள்' கூறுவது ஈண்டு அறியத்தக்கது.

1. Epigraphia Indica. Vol. XXI. No. 27.

2. South Indian Inscriptions. Vol. III. No. 89.

3. செந்தமிழ் - தொகுதி 16, பக். 394.

4. முதற்பராந்தகன் கல்வெட்டுக்கள் கொங்குநாட்டிற் காணப்படு தலாலும் அவன் அதனைக் கைப்பற்றியதாகக் கூறிக் கொள்ளாமையாலும் அந்நாடு அவன் தந்தை முதல் ஆதித்தனால் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

5. Ep.Ind Vol. XV, No. 5. Verse 18.