உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

11


”கச்சிவளைக்கச்சிகாமக் கோட்டங்காவன்
மெச்சியினிதிருக்குமெய்ச்சாத்தன் கைச்செண்டு கம்பக்களிற்றுக்கரிகாற் பெருவளத்தான் செம்பொற்கிரிதிரித்த செண்டு”

என்னும் பழைய செய்யுளானும்

”இலங்கு வேற்கரிகாற் பெருவளத்தோன்
வன்றிறற்புலியிமயமால்வரை மேல் வைக்க வேகுவோன்”

என்னும் பெரியபுராணத்தானும் அறியக்கிடக்கின்றது.

இதனால் இவன் போர்வீரமும் ஆண்மையும் நன்குவிளங்குகின்றன. இவன் தேசத்தில் 60,000 குடிகள் இருந்தார்களென்றும் அக்குடிகளும் நெடுநிலமுழுதாளும் கரிகாலனை முதற்குடியாக வைத்து எண்ணுதலையுடைய அவ்வளவு மிக்கோங்கிய செல்வமுள்ள ஒப்பற்ற குடிகளாயிருந்தார்களென்றும் சிலப்பதிகாரம் கூறும்.

இம்மன்னர் பெருமானின் மீது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் ஒரு தமிழ்ப்புலவர் பட்டினப்பாலை என்னும் பிரபந்தம்பாடி 16 லட்சம் பொன் பரிசுபெற்றவரென்பது,

“தழுவுசெந்தமிழ்ப்பரிசுவாணர் பொன்
பத்தொடாறுநூ றாயிரம்பெறப்
பண்டுபட்டினப்பாலை கொண்டது”

என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளால் அறியப்படுகிறது. மேற்கூறிய பிரபந்தமும், இவன்மீது முடத்தாமக்கண்ணியார் என்னும் தமிழ்ப்புலவர் பாடிய பொருநராற்றுப்படை என்னும் பிரபந்தமும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றன. அன்றியும், சங்கத்துச் சான்றோர் இவன்மீதியற்றி யுள்ள தனிச்செய்யுட் களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன.

இதனால், இவன், தமிழபிமானமேலிட்டு, புலவர்களை ஆதரித்து வந்தவனெனத் தெரிகிறது.

இவ்வரசனின் வாழ்க்கைத்துணைவியா யமைந்தவள் நாங்கூர் வேள்குமாரத்தி; இவர்களுக்கு இரண்டு புதல்வரும் ஒரு