உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13



3. சோழன் செங்கணான்

“கோச்செங்கட்சோழநாயனார்" என்னும் பெயருடன் அறுபத்து மூன்றுநாயன்மார்களில் ஒருவனாக விளங்குகின்றவனும், சைவசமயா சாரியரில் ஒருவராகிய ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையில் 'தென்னவனா யுலகாண்ட செங்கணான்' என்று கூறப்படுகின்றவனும் இம்மன்னனே யாவன்.

இவ்வரசர், பூர்வஜன்மத்தில் ஒரு சிலந்திப் பூச்சியயிருந்தனனென்றும், அப்பொழுது அப்பூச்சி திருவானைக்காவில் திருவெண்ணாவற் கீழமர்ந்திருந்து சிவபெருமான்மீது சூரிய கிரகணங்கள் படாவண்ணமும் சருகுகள் உதிராவண்ணமும் தன்வாய் நூலினாலே மேலேவலைகள் கட்டிப் பாதுகாக்குந் தொண்டு செய்து வந்த தென்றும், அதே சிவலிங்கத்தை வழிபட்டுவந்த ஒருயானை மேலே கட்டியுள்ள வலைகளை அநுசிதமென்று நாடோறும் சிதைத்தும்வர, இதனைப் பன்னாட்களாகச் சிலந்திகண்டு, பொறாது தன்பணிவிடைகளை இரக்கமின்றியழிக்கும் யானையின்மீது சினந்து, அதன் துதிக்கையுட்புகுந்து நோயுண்டாக்க, யானை அதனைப் பொறுக்க முடியாமல் தன் துதிக்கையைக் கீழேயறைந்து தன்னையும் தன்னுட்புகுந்திருந்த சிலந்தியையும் கொன்ற தென்றும், இவ்வாறு மரணமடைந்த சிலந்தியே மறு ஜன்மத்திற் செங்கணானாகப் பிறந்ததென்றும் பெரியபுராணம் கூறும். இதனை,

திருஞானசம்பந்தசுவாமிகள் — அரிசிற்கரைத்திருப் புத்தூர் 7-வது பாசுரம்


”சிலந்திசெங்கட்சோழனாகச் செய்தான்” என்றும்,

திருநாவுக்கரசு சுவாமிகள்- திருக்குறுக்கை 4