21
விஜயலட்சுமி ஒரு தாம்பாளத்தில் தேன்குழலை எடுத்துக்கொண்டு வருகிறாள்.
ச. யார் அது ?
ப. அந்த சரிகைப் புடவையின் டாலிலே உங்களுக்கு கண் கூசுகிறாற்போ லிருக்கிறது -விஜயலட்சுமி ! உங்க நாயினாவே சேவிச்சிக்கோ அம்மா! (விஜயலட்சுமி சேவித்துக் கொள்கிறாள்)
சீக்கிரம் கலியாணமாக வேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள்-அத்தான்.
ச. அது முருகன் திருவுளம்!
தி.பாருங்களேன் அப்படியே நடக்கப் போகிறது-அவர் கருணையினாலே. -
(முருகேசன் உள்ளே வருகிறான்)
மு. நாயினா நம்ப பண்ணையாளுங்க வந்திருக்காங்க.
ச. ஆ | இந்த சந்தோஷத்தில் அவர்களை மறந்தேன்.
தி. அத்தான், நீங்கள் கவலைப் படாதீர்கள்! அவர்களுக் கெல்லாம் கொடுக்க மட்ட தினுசில் நான்கு கதர் வேஷ்டிகள் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.
ச. முருகா! முருகா! உன் கருணையை என்னென்று புகழ்வேன்!
தி . சோமு, அந்த மூட்டையைக் கொண்டுவா அப்பா இப்படி.
ச. வேண்டாம், மெஞ்ஞானம், அவைகளை நீயே கொடுத்து விடு-பண்ணையாட்களுக்கு-உன் கையாலேயே.
தி. நீங்கள் கொடுக்கச் சொன்னீர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறேன்.
ச. அப்படியே செய் அப்பா (திருமெஞ்ஞான முதலியா ரும் சோமுவும் வெளியே போகின்றனர்).