இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒலிபரப்பும் பாடல்வரிகள் சில மேதைகளின் பதிவு செய்த இதயத் துடிப்புகள்.
முந்தாநாள்நீ நாத்திகப் பேச்சுக்களை ஒலிபெருக்கினாய்.
நேற்றுஆத்திகப் பேச்சுக்களை ஒலிபெருக்கினாய்!
இன்றுஅரசியல் பேச்சுக்களை ஒலிபெருக்கிக் கொண்டிருக்கிறாய்!
நாளைஇசைத் தட்டு நடனத்துக்கு அச்சாரம் வாங்கியிருக்கிறாய்! உனக்குக் கொள்கையே கிடையாதா?
ஊம்... உன்னைக் கடிந்துகொண்டு என்ன பயன?
உன் தொழிலே வாடகைக்குப் போவதுதானே?
67