பக்கம்:துணிந்தவன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 4:03 'உன் மீது பிரியம் இருப்பதனால்தான் உனக்கு நல்லது எண்ணிச் சொல் கிறேன். நீ வீட்டுக்குப் போய், உனக்குப் பிடித்தமான ஒரு வாலிபனாகப் பார்த்து, கல்யாணம் செய்து கொண்டு சுகமாக வாழ முயற்சி செய். அது தான் நல்லது பேபி!' என்று வழி வகுத்துக்கொடுத் தான் மாதவன். . 'மூஞ்சி... மூஞ்சி!' என்று அழுத்தமாக, வெறப் போடு உச்சரித்தாள் பேபி. முகத்தைச் சுளித்துப் பழிப்புக் காட்டினாள். அவன் ரசித்துச் சிரித்தான். 'நீங்க ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?" என்று ஒரு கேள்வியை வீசினாள் பேபி. 'எனக்குத்தான் தோழியாய், துணைவியாய் எல் லாமாய் சம்பா இருக்கிறாளே...' என்று ஆரம்பித்தர்ல் அவன். 'சம் பாவும் கும் பாவும்! அது என்ன பேரோ எழவோ!' என்று கரித்துக்கொட்டினாள் அவள். 'உனக்குப் பொறாமை போலிருக்கு இது சம்பா காதிலே விழுந்தால் உன்னைத் துரத்தி அடிப்பாள்...." 'அடிப்பா அடிப்பா... அடிக்கமாட்டா பின்னே?... ஸ்ார். நான் சொல்றதைக் கேளுங்க, நான் உங்க கூடவே இருந்து விடுகிறேன். உங்க கூடவே நடிக்கிறேன், அப்போ நான் நாசமாக முடியாதல்லவா?" அவள் குரல் கெஞ்சியது. அவள் விழிகள் கொஞ் சின. மெளனமாக இருந்த அவனை தொட்டுக் குலுக்கின அவள்கைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/115&oldid=923474" இலிருந்து மீள்விக்கப்பட்டது