பக்கம்:துணிந்தவன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 அகப்படுகிற போதெல்லாம் - சாப்பிடுவது தான் மனிதத் தன்மையாகும்” என்று விளக்கம் கொடுத்தான் மாதவன். 'பொய் சொல்வது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?’ என்று சிறுவன் விசாரித்தபோது, மாதவன் அறிவித்தான்: 'பொய் சொல்ல வேண்டியது அவசியம்தான். பொய் சொல்லாமலே எவனும் வாழ்ந்துவிட முடியாது, பொய் சொல்வது பாபம் என்பது சும்மா. பொய் சொல்லு வது தனித் திறமையாகும். அதனால் கற்பனை வளரும். பொய்தான் கலைகளுக்கே ஜீவாதாரம்....' இந்த விதமாக அவன் சிறுவனுக்குப் புதுமுறைப் பயிற்சி அளித்து வந்தான் பையன் அணில் பிள்ளையைக் குறி வைத்துக் கல்லெறிந்து கொல்வதில் ஆர்வம் காட்டி னான். மாதவன் அவனைத் தடுக்கவில்லை. அது தவறு என்று போதிக்கவுமில்லை. 'அணில்களை மட்டும் அடிப்பதுடன் உன் வேட்டை நின்றுவிட வேண்டாம். குருவிகளையும் குறி பார். கொல்ல முடிந்ததை எல்லாம் கொல்லு. இப்படிப் பயிற்சி பெற்றுக்கொண்டே வந்தால், என்றைக்காவது ஒரு நாள் நீ சிங்கம் புலி முதலியவற்றைக் கூடக் கொல்லும் திறமை பெற்று விடுவாய்' என்று உற்சாகப்படுத்தினான். மாதவனின் பயிற்சி உண்மையிலேயே புதிய முறை யில் தான் அமைந்திருந்தது. சின்னப் பையனுக்கு இயல் பாக உண்டாக்கக்கூடிய துஷ்ட குணங்களை எல்லாம் குறும்புத்தனங்கள் - கோளாறுகள் - ஆசைகள் - வெறித் தனங்கள் முதலிய பலவற்றையும் அவன் ஆதரித்தது மட்டுமல்ல; அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/45&oldid=923518" இலிருந்து மீள்விக்கப்பட்டது