பக்கம்:துணிந்தவன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 39 வாழ்க்கையை அனுபவிக்கத் துணிந்த எவளாகவேனும் இருப்பாள்...." அவன் உளக்கொதிப்பு தணிவதற்கு வெகுநேரம் பிடித்தது. அதற்குள் அவ் இருவருக்கும் அவன் அர்ச்சித்த ஏச்சுக்கு ஒரு அளவு கிடையாது. அப்படியும் திருப்தியுறாத அவன் மனம் இருக்கட்டும்; அந்த முகத்தை நான் மறக்க மாட்டேன். நான் சிரிப்பதற்கு உரிய காலம் ஒன்று வரும். கடைசியாகச் சிரிப்பவனே வெகுநேரம் வரை சிரிப்பான் என்றொரு வசனம் இருக்கிறதே, அதை மெய்ப்பித்துக் காட்டுவேன்' என்று முணுமுணுத்தது. 9 பவானந்தம் பெரிய மனிதர் என்று பெயர் பெறு வதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தாம் 'ரொம்பப் பெரியவர்' என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு. அப்பாவி ஜனங்களுக்கு அது தெரியவில்லையே! அவரிடம் பணமும் சொத்தும் நிறையவே இருந்த தால், தமது ஆசையை எளிதில் பூர்த்தி செய்து விடலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அது வெகு சீக்கிரமே நிறைவேறி விடும் என்று தான் மாதவனுக்கும் தோன்றியது. பவானந்தத்தைக் கண்டு போக வந்தவர்களை எல்லாம் அவன் அளவிட்டதனால் எழுந்த எண்ணம் அது. கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும், கவிஞர்கள் எனப் பெயர் பண்ணியவர்களும், பத்திரிகை ஆசிரியர்கள் என வெளிச்சமிட்டவர்களும், அரசியல் தலைவர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறவர் களும் அவரைச் சந்தித்துப் பேச வந்தார்கள். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/51&oldid=923525" இலிருந்து மீள்விக்கப்பட்டது