பக்கம்:துணிந்தவன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv வளர்ச்சிக்கு சரஸ்வதி ஆற்றிய சேவை மகத்தானது. மணிக் கொடி'க்கு பின் பல முற்போக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை சரஸ்வதிக்கு உண்டு. சரஸ்வதி ஆற்றிய சிறந்த இலக்கிய சேவை பற்றி திரு. வல்லிக்கண்ணன் தமது அணிந்துரையில் எடுத்துக் கூறி புள்ளார். பல சிரமங்களுக் கிடையே 1955லிருந்து 1962 வரை சரஸ்வதியை சிறப்பாக வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ்கரன் அவர்கள் , முற்போக்கு இலக்கிய வாதிகள், ஏன் சாமான்ய தமிழ் மக்கள் அனைவரின் பாராட்டுக்குரியவர். '"துணிந்தவன் மறுபதிப்பை தமது முன்னுரையுடன் வெளியிட எங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்த எமது அருமை நண்பர் விஜய பாஸ்கரன் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். ’துணிந்தவன்’ என்ற இந்த வித்தியாசமான சிறந்த நாவல் தமிழ் மக்களின் பரந்த ஆதரவைப் பெறும் என்றும் பல மறுபதிப்புகளில் வெளிவரும் என்று நம்புகிறோம். பாவை பப்ளிகேஷன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/6&oldid=923534" இலிருந்து மீள்விக்கப்பட்டது