பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

103


உள்ளே அழைத்துப் போனாள், சிவகாமியம்மாள் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

மங்கை சாமான்களை உள்ளறையினுள் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து, சிவகுமாரனை நோக்கி, "அத்தான், அக்கா, கணேசன், கோகிலா, விசுவம் எல்லாம்....." என்று ஷேமலாபம் விசாரிக்கலானாள்.

சிவகுமாரன், "எல்லாம் சௌக்கியந்தான், சித்தி!......" என்று புன்முறுவலுடன் சொன்னான்.

"யோக க்ஷேமம் விசாரிப்பது இருக்கட்டும், மங்கை! முதலில் சிவா காலைக் கடனை முடிக்கட்டும், பலகாரமெல்லாம் செய்தான பின்னர்,....." என்று அன்னை மகளுக்குக்... கடமையை உணர்த்தினாள்.

மங்கை சிவகுமாரனைப் புறக்கடைக்கு அழைத்துச் சென்றாள். பல் விளக்கச் சொல்லிவிட்டு வெந்நீர் போட்டுக்.... கொண்டு போய்க் கொடுத்தாள். அவன் குளித்து வருவதற்குள் பலகாரம் தயார் செய்து விட்டாள்.

சிவகுமாரன் சிற்றுண்டி, காபி முதலியன அருந்தியான , பின், அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த மங்கை, "என்ன சிவா, முகம் ஒரு மாதிரியிருக்கிறது? உனக்கு உடம்பு ஒன்றுமில்லையே?...அல்லது வேறு யாருக்காயினும்....." என்று கேட்டு நிறுத்தினாள்.

"எனக்கு ஒன்றுமில்லை" என்று சொல்லி விட்டு, சிவகுமாரன் மங்கையின் முகத்தை ஒருவிதமாக நோக்கினான்.

"என்ன தயங்குகிறாய்? சிவா! யாருக்காயினும்......."

மங்கை பதற்றத்துடன் கேட்டாள்.

சிவகுமாரன் சிந்தனையோடு "இருந்தது சிவகாமி"யம்மாளுக்கும் சிந்தாகுலத்தை யுண்டு பண்ணியது.

"சொல்லு, சிவா! யாருக்கு என்னவென்று?"