104
தும்பைப்பூ
பாட்டியும் கேட்ட பின் சிவகுமாரனால் பேசாமலிருக்க முடியவில்லை.
"சித்தி வந்தபின், தம்பி நோயில் விழுந்து விட்டான்......"
"யாரு விசுவமா?" என்று கேட்டாள் சிவகாமியம்மாள்.
"கணேசனுக்கா உடம்பு அசௌக்கியம்?" என்ற சொல்லி வைத்தாற்போல் வினவினாள் மங்கை.
"ஆமாம், சித்தி! கணேசனுக்குத்தான் காய்ச்சல்......கைகால் எல்லாம் வீங்கியிருக்கு....."
மங்கை பதறிப்போய், "என்ன, சுரமா? கைகால்களும் வீங்கியிருக்கா?"
"காய்ச்சல் கண்டால் கையும் காலும் ஏன் வீங்கும்? இதென்ன, புதுவிதமான நோயாயிருக்கிறதே!"
சிவகாமியம்மாள் வியப்போடு பேசினாள்.
"டாக்டரை அழைத்து வந்து காட்டினீர்களா? அவர் என்ன சொன்னார்? மருந்து என்ன கொடுத்திருக்கிறார்?"
மங்கை மூச்சு விடாமல் கேட்டுக்கொண்டே போனாள்.
சிவகுமாரன், "நம்ம குடும்ப டாக்டர்தான் வந்து பார்த்து மருந்து கொடுக்கிறார். ஆனால் குணம் சிறிதும் காணவில்லை......"
"என்ன? மருந்து கொடுத்துமா குணம் ஏற்படவில்லை. இது என்ன?" உணர்ச்சியால் மங்கையின் பேச்சு தடைப்பட்டது
"அது தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கவலையாயிருக்கிறது. ஆகாரம், தூக்கங்கூடக் கொள்ளாமல் பித்துப் பிடித்தவர்கள் போல் உட்கார்ந்திருக்கிறார்கள்."
சிவகுமாரன் தயங்கித் தயங்கி விஷயத்தை விவரித்தான.