பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

105


"ஒருவேளை தெய்வக் குற்றமா யிருக்குமோ! குல தெய்வத்துக்கு......"

சிவகுமாரன், "டாக்டர்கூட இது உடம்பால் உற்ற நோயாகத் தெரியவில்லை, வேறு ஏதோ......"

"வேறு என்னவாயிருக்கும்'......பச்சைக் குழந்தைக்கு......"

"கணேசன் சதா சித்தி, சித்தி என்று அரற்றிக் கொண்டே யிருக்கிறான், சித்தி! அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் உங்கள் கவனத்தால் அவனுக்கு உடம்பு அப்படியிருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். சுரங் கண்டால் கைகால் வீங்குவதற்குக் காரணமில்ல என அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்......"

"ஆமாம்; ஆமாம், இப்போது தான் எனக்கும் ஞாபகம் வருகிறது. குழந்தைகள், சிறுவர்கள் பெற்றவர்களிடத்தோ பிறரிடத்தோ பாசமாயிருந்தால் அவர்கள் பிரிவைத் தாங்காமல் இப்படித்தான் உடம்பு உப்புசமாகிக் கஷ்டப்படுவார்கள். சில பிள்ளைகளுக்கு மூஞ்சியெல்லாம் கூட வீங்கிவிடும்...... இதை நான் பார்த்திருக்கிறேன்..."

பாட்டி பேசி நிறுத்துவதற்கு முன்னே, சிவகுமாரன் பேசத் தொடங்கி, "அதற்கேற்றாற்போல, பாரு பாட்டி! சித்தி வந்த மறுநாளே கணேசன் படுக்கையில் விழுந்து விட்டான்..." என்று சொன்னான்.

"அப்படியா?" என்று கேட்டவாறு சிவகாமியம்மாள் மகணின் முகத்தைப் பார்த்தாள்.

மங்கை கண்கலங்கி அழுது கொண்டிருந்தாள்.

சிவகுமாரன் அவளைப் பார்த்து, "அப்பாவும் அம்மாவும் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொன்னார்கள், சித்தி!" என்று மெல்லச் சொன்னான்.

து.-7