பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப் பூ

107


யுடையவள அம்மா ஏதோ தவறாகக் கருதிக் கோபித்துப் பகையை பாராட்டிகளே என்று அவன் எண்ணி வருந்தினான்.



சதானந்தம் பிள்ளை வீட்டுக் கூடத்தில் குறுக்கும் நெதிக்தமாக உலாவிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் காணப்பட்ட கலவரம் அவருடைய நிம்மதியற்ற நிலைமையையும் தீவிர யோசனையையும் பிரதிபலிப்பதா யிருந்தது. இடையிடையே அவருடைய கண்பார்வை கூடத்தைச் சேர்ந்தாற்போலிருந்த அறையை நோக்கலாயிற்று.

அந்த அறைக்குள் திலகவதி, கணேசன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் சோகமே உருவாக உட்கார்ந்திருந்தாள். சோகை நோய் கொண்டவன் போல் உடம்பெல்லாம் முகம் புடைத்து வெளுத்திருக்கும் மகனையே கவலையோடு கவனித்துக் கொண்டிருந்த அவள் அடிக்கடி கணவனையும் கடைக் கணிக்கலானாள். மூச்சுப் பேச்சில்லாமல் வெகு நேரம் அசைவற்றிருப்பதும் திடீர், திடீரெனக் கண்விழித்து ஏதேதோ அரற்றுவதுமாயிருக்கும் தம்பியைப் பார்த்து, என்னவோ ஏதோ என்று அச்சங் கொண்டு, கோகிலா ஒரு பக்கத்திலிருந்து குழம்பிக் குமுறிக் கொண்டிருந்தாள். விசுவநாதன் தன் அறையிலிருந்து ஏதோ காரியமாய் வருவது போல, அடிக்கடி அப்பக்கம் வந்து நிலைமையைக் கவனித்துப் போய்க் கொண்டிருந்தான்.

டாக்டர் சிறிது நேரத்துக்கு முன் தான் வந்து போனார். அவர் கணேசனைக் குறித்துக் கமலை கொள்வதற்கு ஒன்றுமில்லை யென்றும், கூடிய சீக்சிரம் குணமாய் விடுமென்றும், தைரியம் சொல்லிவிட்டுப் போயும் திலகவதியும் ஆறுதல் கொள்ளவில்லை; சதானந்தம் பிள்ளையும் சாந்தியடையவில்லை.

"ஏன் திலகம்? மங்கை வருவாளா?..." என்று இருந்தாற் போலிருந்து பிள்ளையவர்கள் மனைவியை நோக்கிக் கேட்டார்.