பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தும்பைப் பூ

யிருக்க ஒடியாது. அப்பேர்ப்பட்ட தேவாதி தேவனுக்குக் கூட....."

மாசிலாமணி முதலியார் வந்தவுடனேயே, அந்தச் சந்தடி சாக்கில் மெல்ல அவ்விடத்தைவிட்டுப் போய்விமுயன்ற சிவகுமாரன் காவெழாது இதுவரை தவித்துக் கொண்டிருந்தான், அவன் இருவர்க்கிடையிலும் பேச்சு மும்முரமாய் வரும் இச்சமயத்தில் ஓசைபடாமல் செல்ல அடியெடுத்து வைத்தான்.

வந்ததிலிருந்து அசடு வழிய நின்று கொண்டிருக்கும் சிவகுமாரன் மீத கடைக்கண் வைத்திருந்த மாசிலாமணி முதலியார் தம் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, "என்ன சிவா, நான் வந்ததும் போகிறாய்?-ஆமாம்; உன் பரீட்சை 'ரிஸல்ட்' தெரிந்ததா? அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலா மென்றால் நீ..." என்று கேட்டுக் குறும்பு நகை புரிந்தார்.

இது கேட்டு, சிவகுமாரன் திடுக்கிட்டு நின்று விட்டான்.

சதானந்தம் பிள்ளை, "நீங்கள் வரும்போது நடந்து கொண்டிருந்த ரகளைக்கு இதுதான் காரணம், பையன் பரீட்சையில் கோட் அடித்து விட்டான்" என்று புன் முதுவலை வருவித்தவாறு சொன்னார்.

ஏற்கனவே, தாம் வரும்போது அரைகுறையாக விழுந்த வார்த்தைகளாலும் அங்கு நிலவியிருந்த சூழ் நிலையாலும் விஷயத்த ஒருவாறு ஊகித்திருந்தும் மாசிலாமணி முதலியார் ஒன்றும் தெரியாதவர்போல் பாசாங்கு செய்தவாறு, "என்ன! சிவனின் பரிட்சை ரிஸல்ட் என்ன ஆயிற்று என்கிறீர்கள்? பெயிலாகிவிட்டானென்ற சொல்கிறீர்கள்?" என்று வியப்புத் தோன்றக் கேட்டார்.

ஏற்கனவே அவமானத்தால் குன்றிப்போயிருந்த சிவகுமாரன், முதலியாருடைய கேள்விக்கு அப்பா என்ன விதமாகப் பதில் சொல்வாரோ என்ற அச்சத்தோடு குனிந்த தலையை நிமிராமலே கடைக்கண்ணால் நோக்கினான்.