பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தும்பைப் பூ


இதற்குக் காரணமாகும். வியாதியின் மூலத்தையுணர்ந்தால் தானே அதைப் போக்க முடியும்?

மாசிலாமணி முதலியார் மூட்டிவிட்ட தீதான் திலகவதியம்மாளைச் சரியாகப் பற்றிக்கொண்டது. அவர் பிள்ளையவர்களுடன் அடிக்கடி பேசி வந்த பேச்சிலிருந்து கணவனைப் பற்றியும் குமாரர்களைப் பற்றியும் அறிந்த சில விஷயங்கள் அவளுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணின. 'உத்தமரான என் கணவரையும் உலகம் சந்தேகிக்கிறதே! விரோதிக்கிறதே! உலகம் என்றால் யார்? அறிவால், ஒழுக்கத்தால் உயர்ந்த ஆன்றோர்களா? நற்குண சம்பன்னர்களா? இல்லை; இல்லை. சுயநலத்தால் சூழ்ச்சி செய்யும் உலுத்தர்கள்-யோக்கியப் பொறுப்பற்றவர்கள் தான் என் கொழுநரைக் குறை கூறுகிறார்கள்; குற்றஞ்சுமத்த முயல்கிறார்கள். குரோதங் கண்டு தீமை புரியச் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிருர்கள். காங்கிரஸில்-தேச மகா சபையாகிய காங்கிரளில் - தாதாபாய் நெளரோஜிகோபாலகிருஷ்ண கோகலே-சுரேந்திர நாத பானர்ஜிவிவினசந்திர பாலர்-பால கங்காதர திலகர்-போன்ற தேச பக்தர்கள்-தியாகிகள் அரும் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸில்-காந்தி மகான்-சத்தியத்தையும் அஹிம்சையும் ஆயு தங்களாகக் கொண்டு சுதந்திரப் போராட்டம் நடத்திய மகாத்மா காந்தி பலப்படுத்திய காங்கிரஸில்-சுபாஷ் சந்திர போவின் அரும்பெருந் தியாகத்தாலும், வீரதீரப் போராட்டத்தாலும் நாட்டுக்கு ஆட்சி சுதந்திரம் வாங்கித் தரும் பெருமை பெற்ற காங்கிரளில் கூடவா சுயநலவாதிகள் அயோக்கியர்கள் மலிந்துவிட்டார்கள்? அட கடவுளே! தந்தை மீதுள்ள வஞ்சங் காரணமாக, பிள்னைகள்மீது பழி தீர்த்துக்கொள்ளப் பார்க்கிருர்களே! கயவர்கள்? என்று எண்ணியெண்ணி மனம் வருந்தினாள்.

இவர் எதற்காக அந்த அயோக்கியர்களோடு மல்லாடுகிறார்? நீதியும், நேர்மையும், உண்மையும் இல்லையென்று அறிந்தால் இவர் பேசாமல் விலகிக் கொள்வதுதானே !