பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தும்பைப்பூ


ஜட்கா வண்டி. பிரஸிடென்ஸி காலேஜ், சர்வ கலாசாலை பரிட்சை மண்டபம், ஐஸ் ஹவுஸ் கட்டிடம், மேரிராணி மகளிர் கல்லூரி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆபீஸ் கட்டிடங்களனைத்தையும் முறையே கடந்து, மக்கள் வசிக்கும் பகுதியில் பிரவேசிக்கலாயிற்று.

செம்படவர்கள் குடிசைகள் சில இடப்பக்கம் தென்பட்டதுமே மங்கையர்க்கரசி, "ஆமாம், அம்மா! நாம் போக வேண்டிய இடம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?..." என்று கேட்டாள்.

"அதுவா? இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கிறது..." என்று கூறியவாறே, "இதோ குடிசைகள் தெரிகிறதே! இதற்குத்தான் நடுக்குப்பம் என்பார்கள். எதிரில் சுடுகாடு இருக்கிறது இல்லையா? ஆமாம் இந்த இடத்துக்குப் பக்கம் தான் இருக்கிறது உன் அத்தான் வீடு; சமீபத்தில்தான் வந்து விட்டோம்......" என்று யோசனையோடு சொன்னாள் அன்னை.

பின், சிவகாமியம்மாள் நாலா பக்கங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே, "நான் இங்கு வந்தே எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டது. அதனால் இடமெல்லாம் மறந்துகூடப் போச்சு, அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தால் தான் எதுவும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வத்தவள் வண்டிப் பக்கமாகக் குறுக்கிட்ட ஒரு மனிதரைக் கூப்பிட்டு, "இங்கே சதானந்தம் பிள்ளை வீடு இருக்கிறதே! அது எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா! ஐயா......" என்று விசாரித்தாள்.

"யாரையம்மா கேக்கறீங்க? வக்கீல் ஐயாவையா? காந்தி குல்லா கூடப்போட்டிருப்பாரே!..... என்று கேட்டான் வழிப்போக்கள்.

"ஆமாம், ஆமாம்" என்று ஆவலோடு சொன்னாள் சிவகாமியம்மாள்.