பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தும்பைப்பூ

17


"இன்னம் பத்து கஜ தூரம் போகவேணுமுங்க. வீடு பங்களா மாதிரியிருக்கும்; 'கடலகம்' என்று கல்கூட அடித்திருக்கும்" எனச் சொல்லிவிட்டு, வண்டிக்காரனை நோக்கி, "கான்வென்ட் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே இருக்கிறது சாயபு! இவர்கள் போகிற வீடு, சதானந்தம் பிள்ளை பிரபல வக்கீலாச்சே காங்கிரஸ் கூட்டங்களிலே கூடக்கலந்து கொள்வாரே! உனக்குத் தெரியாதா சாயபு! ......." என்று சொன்னாள்.

"நம்பள்கி அதெல்லாம் தெரியாது, ஐயா! நாம்பள் பட்டணம் பக்கத்திலே இருக்கிறான்......" என்று சொல்லிக் கொண்டே வண்டியை நிறுத்தாமல் ஓட்டினான்.

வழிப்போக்கன் அவனுக்கு வீடு இருக்கும் இடத்தின் அடையாளத்தை விவரித்துவிட்டுப் போனான்.

"நான் காட்டுகிறேன், சாயபு! எனக்கு இப்போது இடம் தெரிந்து விட்டது" என்று சொன்னாள் சிவகாமியம்மாள்.

இதுவரை ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மங்கையர்க்கரசி தாயை நிமிர்ந்து நோக்கி, "அம்மா! இடம் நெருங்க நெருங்க எனக்கு என்னவோ போல் இருக்கிறது, அம்மா!..." என்று குரலில் நடுக்கம் தொனிக்கக் கூறினாள்.

"போடி, பைத்தியமே! நீ எதற்காக இப்படி பயந்து சாகிறாய்? அக்கா வீட்டுக்குப் போகிறதற்கு இவ்வளவு அச்சமேன்? பெரியம்மாவைப் போலவே திலகவதியும் நல்லவள். நீ வேண்டுமானால் பாரேன்! கூடப் பிறந்த சகோதரிகூட அவ்வளவு அன்பாக இருக்கமாட்டாள். ரொம்பப் பிரியமாக அவள் உன்னிடம் இருப்பாள். அவள் அகமுடையானும் மிக நல்லவர், அப்படியில்லாவிட்டால், நான் உன்னை அவனிடம் அழைத்து வந்து விடுவேனா?......." என்று சிவகாமியம்மாள் ஆறுதல் மொழி கூறினாள்.

"நீங்க என்னதான் தைரியம் சொன்னாலும், எனக்கென்னமோ நெஞ்சு திக்திக்கென்று தான் அடித்துக் கொள்-