பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தும்பைப் பூ


"முதன் முதலாக அத்தான் வீட்டுக்கு வருகிறாள் இல்லையா? அதனால் தான் வெட்கம்..." என்று மகளைப் பார்த்துக் கொண்டே திலகவதிக்குப் பதிலளித்தாள் சிவகாமியம்மாள்.

மங்கையர்க்கரசி தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டாள்.

"மங்கை முன்னைக்கு இப்போ இளைச்சுப்போயிருக்காளே?" என்று திலகவதி அவளை ஏற இறங்கப் பார்த்தவாறே கேட்டாள்.

"கொஞ்சம் இளைப்புத்தான்” என்று சிவகாமியம்மாள் இழுப்புடன் சொல்லி நிறுத்தினாள்.

திலகவதி, வந்திருப்பவர்களை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளை நோக்கி, "என்ன, பார்க்கிறீர்கள்? உங்க பாட்டி, சின்னம்மா! ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள்" என்று கிரித்துக் கொண்டே அறிமுகப்படுத்தினாள்.

"கடைக்குட்டி, சிவகுமாரனை மீறி விட்டானே!" என்று வியப்புணர்ச்சியுடன் வேடிக்கையாகச் சொன்னாள் சிவகாமியம்மாள்.

மங்கையர்க்கரசி பிள்ளைகளை ஆசையோடு நோக்கினாள்.

"சரி, சரி, வாங்க முதலிலே குளித்து விட்டு சிற்றுண்டி சாப்பிட்ட அப்புறம் எல்லாம் பேசலாம்" என்று திலகவதி கூறி அவர்களைப் பின்கட்டுக்கு அழைத்துப் போனாள்.