பக்கம்:தும்பைப்பூ-நாவல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தும்பைப் பூ


கை கழுவ எழுத்தவர், அவள் கண் கலங்கி நிற்பதைக் கண்டு பதறிப்போய்விட்டார்.

"என்ன, மங்கை ! ஏன் அழுகிருய்? நான் உன் மனம் புண்பட ஏதாயினும் சொல்லி விட்டேனா? கூறத்தகாத வார்த்தைகளைக் கூறி விட்டேனா?......" என்று கேட்டுக் கொண்டே அவர் அவளை அணுகினார். அவர் கரங்கள் அவரை யறிலாமலே அவளை ஆதரவாகப் பற்றி இமைகளின் ஓரத்தில் வழிந்த வரும் கண்ணீரை அவர் போட்டிருந்த மேல் குட்டையால் துடைத்தன.

அவருடைய கர ஸ்பரிச சுகத்தில் ஈடுபட்டு மங்கை தன்னுணர்வின்றி இருந்தாள்.

"சித்தி, சித்தி! எங்கே இருக்கிறே?!" என்று கூவிக் கொண்டே இச்சமயம் கணேசன் புத்தகப்பையைக் கையில் பிடித்தவாறே அங்கு ஓடிவந்தான். அவர்கள் அப்போ திருந்த நிலை விவரமறியாத அச்சிறுவனையும் திகைத்து நிற்க வைத்தது. சில விநாடிகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற் போல் புத்தகக் கட்டுடன் வந்த கோகிலா கால் பின் வாங்கி நின்றாள்.

மங்கை விதிர் விதிர்த்துப் போய் வேகமாய் விலகினாள். அதைவிட சதானந்தம் பிள்ளை, வெட வெடப்புடன் தள்ளி நின்றார்.

"சித்தியின் கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாம்......" என்று அவர் நாக்குழறச் சமாதானங் கூற முயன்றார்.

கோகிவா தன்னை ஒரு விதமாகச் சமாளித்துக் கொண்டு புத்தகக் கட்டுகளைத் தம்பியிடம் கொடுத்து எடுத்துப் போய் வைக்கச் சொல்லிவிட்டு, "எங்கே சித்தி, கண்ணைக் காண்பி! நான் தூசியை ஊதுகிறேன்" என்று கூறி கொண்டே அருகே வந்தாள்.