70
தும்பைப் பூ
கோகிலா குழாயடியில் போய் முகம், கை கால்களைச் சுத்தஞ் செய்யலானாள்.
கணேசன் ஆர்வத்தோடு அம்மா மடிமீது விழுந்து தழுவிக் கொள்ளப் போனான். “அடே, அடே! தூரவே நில்லு, கிட்டவராதே!” என்று கைகளை நீட்டித் தடுக்க முயன்றவாறு கூச்சல் போட்டாள் திலகவதி.
“ஏன், அம்மா! நான் கிட்ட வந்து தொட்டா தீட்டா ஒட்டிக்கும்?...” என்று கேட்ட கணேசன், “நான் பள்ளிக் கூடத்திலே யாரையும் தொடலேம்மா! எந்தப் பசங்களோடும் விளையாடல்லே... அப்படியிருந்தா சட்டையைக் கழற்றிப் போட்டுக் குளிச்சிட்டு வந்திருப்பேனே...” என்றான்.
“அதுக்கில்லேடா, நீ என்னைத் தொட்டுக்கப்படாது!...”
“ஏம்மா பறைச்சியாயிட்டியா? தொடாதவளா ஆயிட்டி டியா?”
“ஆமாம்...”
“போம்மா, நீ நினைச்சா இப்படி வந்து உட்கார்ந்துக்கிறது? என்னைத் தொடாதே என்கிறது? எல்லாம் என்னை ஏமாத்தத்தான். எனக்குத் தெரியும். நீ பறைச்சியுமில்லே; பாப்பாத்தியுமில்லே...”
“துஷ்டத்தனம் பண்ணாதே!”
“அதெல்லாம் இல்லே; உன்னைத் தொடத்தான் போறேன். தீட்டு ஒட்டிக்குதா என்று பார்க்கிறேன்.”
“நான் சொன்னா கேட்கமாட்டே?”...
“ஊஉம், நீ எழுந்து வந்து கை நிறைய சாக்லேட் கொடுத்தாத்தான் விடுவேன்...”
“சித்தியைப் போய்க் கேளு, கொடுப்பாள்...”
“சித்தி கொடுக்கமாட்டா! அதைத் தின்னு; இதைத் தின்னுன்னு எதையெதையோ கொடுப்பாளேயொழிய