பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

—61—

இவ்விரு பகைவர் கூட்டத்திற்கு இடையே நாம் இருந்து யாது பயன்? இப் பஞ்சபாண்டவர் இத் தரணியினை ஆளுதல் தவம் என்றும் கெளரவர்கள் விண்ணுலகம் புகுதல் தவம் என்றும் கருதுகின்றனர். ஆகவே, நீர் மீண்டு சென்று துரியதிையர்கட்குப் பாண்டவர். கருத்தைப் பகர்ந்திடுவீராக " என்று மொழிந்தனன். -

சஞ்சய முனிவர் அதற்குமேல் ஒன்றும் பேசிற் றிலர். கண்ணன் கழறியபடியே அத்தினபுரம் நோக்கிப் புறப்பட்டனர். துரியனையும் திருதராட்டி ரனேயும் கண்டு தருமர் கூறிய கூற்றையும் கண்ணன் கழறிய மாற்றங்களையும் வீமன் மொழிந்த வீர மொழிகளையும் ஒன்றையும் விடாது உரைத்திட்டார்.