பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பிரயாணம்

என்னைக் குறியிடம் கொண்டு சேர்க்கமாட்டாயா? நான் உன்னைக் கெஞ்சுகின்றேனே? வேறு நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் உன்னுல்தானே ஆக வேண்டும்? நீ செலுத்தினல் நான் போகிறேன், நீ ஒடக்காரன்; நான் ஒடம். நீ உயிர்; நான் உடல். நீயின்றி நானென்ன செய்ய இயலும்? ஒடக்காரா. இன்னும் அருள் சுரக்கவில்லையா? என்னை நீ எங்கே தள்ளிச் செல்லுகின்ருய்?

           108