பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலி கடிதம்


ஒர் இள நங்கை அழகுக்கு அழகு செயும் அழகி மதனனே மயங்கிவிழும் வனப்புடையாள் சிற்றோடை யொன்றில்

   சேலை துவைத்திருந்தாள் கட்டழகன் காளை
   காவலனும் கண்ணுற்றான்; 
   காதலித் தான்

'மங்கையே உன்னை

  மணக்க மிக விழைகின்றேன்; சங்கையுற வேண்டா
   தரணிக்கு நாயகன் நான். மேற்கொண்டு நான் செல்லும்
 வினைமுடித்துக் கூப்பிடுவேன், வரவேணும்' என்றிரந்தான் :
     பாவை உடன் பட்டாள்-

சென்றுவிட்டான் இளவேந்தன்

   காத்திருந்தாள் பெண்ணமுது
   காதலினால் ;-

மங்கைப் பருவம்போய்

   வயோதிகமும் வந்ததன்றே; மேனி சுருங்கிற்று :
   முகமதியம் கலைமாறிச் 

சாகும் பருவத்தைச்

   சார்ந்துவிட்டாள் கற்பரசி.



          116