இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலி கடிதம்
ஒர் இள நங்கை
அழகுக்கு அழகு செயும் அழகி மதனனே மயங்கிவிழும் வனப்புடையாள்
சிற்றோடை யொன்றில்
சேலை துவைத்திருந்தாள் கட்டழகன் காளை காவலனும் கண்ணுற்றான்; காதலித் தான்
'மங்கையே உன்னை
மணக்க மிக விழைகின்றேன்; சங்கையுற வேண்டா தரணிக்கு நாயகன் நான். மேற்கொண்டு நான் செல்லும் வினைமுடித்துக் கூப்பிடுவேன், வரவேணும்' என்றிரந்தான் : பாவை உடன் பட்டாள்-
சென்றுவிட்டான் இளவேந்தன்
காத்திருந்தாள் பெண்ணமுது காதலினால் ;-
மங்கைப் பருவம்போய்
வயோதிகமும் வந்ததன்றே; மேனி சுருங்கிற்று : முகமதியம் கலைமாறிச்
சாகும் பருவத்தைச்
சார்ந்துவிட்டாள் கற்பரசி.
116