இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலி கடிதம்
'அண்ணலை நான் மற்றொரு
கால்
காண்பேனே?
கண்டாலே பாக்கியமே'
என்றே அரசுறையும்
எழில் நகரம் தான் வந்தாள்:
மன்னவனைக் கண்டாள் ; மற்றவன் தன் வார்த்தை சொன்னாள் ;
‘ஐயகோ அரசுப் பெரும்பாரம் உள்ளத்தில் மலையாகி
உன் நினைவைத் தான் புதைத்து
அறவே மறந்துவிட ஆக்கினதே ! மற்றோர் இளமாதை
மணம் புரிந்த காலத்தும் உன்னை மறந்தேனே,ஐயையோ!
பெண்மை அணிவிளக்கைப் பெருந்துயரில் வைத்தேனே' என்னத் துயர் உழந்தான்; கன்னியும் சோர்ந்தாள் ; காதற் கடவுளுக்குக் காணிக்கை யாய்ச்சேர்ந்தாள். உதயச் சுடர்நாட்டில்
உற்ற அவலமிது:-
காதல் மறதியினால்
கன்னி உயிர் வாடுவதை இக்கதையிற் கண்டோம் என்கதையும் இதுதானே ?
117