இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வீரன் குமரன்
உடலை நொறுக்கி யடக்கினால்-நெஞ்சில்
ஓங்குபேர் ஆர்வம் ஒடுங்குமோ ?
கடலின் கொதிப்பைக் குறுந்தடி-வீச்சிற்
கட்டுப் படுத்தவுங் கூடுமோ?
கொடியும் பறந்தது வானிலே-ஆனால்
குமரன் மயங்கி விழுந்தனன்;
வடியுங் குருதியும் மண்மிசை-அடிமை
மாசைத் துடைத்துப் படிந்தது.
"என்னை அடித்த அடியெலாம்-பாரத
அன்னை விலங்கை உடைத்தன ;
முன்னைப் புகழ் அவள் எய்துவாள்- கடைசி
மூச்சில் இதைநானுங் கூறினேன்.
ஜயஜய பாரதம்” என்றனன்-அந்தத்
தாயும் மடியினில் ஏற்றனள் ;
"ஜயஜய" என்றனர் யாவரும்-குமரன்
சத்தியம் போல்புகழ் தாங்கினான்.
131