பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவியும் ராணாவும்

“பெண்க ளுக்கணி யானதோர் அன்னையே பேசும் வார்த்தையைக் கேட்டுயிர் நீங்குவாய் மண் ணிதையினி மீட்குமுன் கையினில் வாங்கும் வாளினை விட்டுப் பிரிந்திடேன்.

“உன்றன் ஆவிநற் சாந்தியை எய்துக;
உயிரின் நல்லவர் நாதனும் மைந்தரும்
சென்ற வீரத் தலத்திடைச் சேருவாய்;
திரும்பி னேன்சித் தூரையே மீட்கநான்.”

புயல் மடிந்தது மன்னன் உளந்தனில்
புத்து ணர்ச்சியும் பொங்கிச் சுரந்தது;
“ஜய மடைந்திடு வேன்தனி நின்றுநான்
தளர்வு தீர்ந்தனன்” என்று முழங்கினான்.

136