பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரகை கதிரவன் மறைந்தான் கதிரொளி மாய்ந்தது கண்டு மயங்கிடும் உலகினை நினைந்தே ஆயிரம் ஆயிரம் அகல்என மீனினம்) நீல விசும்பினில் நித்திலக் கோவைபோல் சிறுமணி ஒளியால் உலகினுக் கின்பமே தருவன பாரீர் தாரகை அவைபோல் சிறுசிறு நல்ல சேவையால் அவனியில் இன்பமே பெருகிட என்றும் முயல்வோம் 234