பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கடிதம்

பெருமூச்சுத் தழலிடையே
பேதுற்றுக் கண்ணுறங்கா
அவலத்தில் தோய்ந்துள்ளேன்
அன்புடனே வருவாயோ?
பவளத்தில் முத்தொளிரப்
பாகுமொழி சொரிவாயோ?
காதலெனும் தேன்வெள்ளக்
காவிரியில் இருவருமாய்
மேதினியை விண்ணாக்கி
விளையாடிக் களிப்போமோ?


செறி-நெருக்கமான, கித்திலம்-முத்து. பேதுற்று-பித்துப் பிடித்து, அவலம்-பெருங்துன்பம. பவளத்தில் முத்தொளிர பவளம் போன்ற இதழ்களிடையே முத்துப்போன்ற பற்கள் விளங்க, 244