பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ இதழுக்குப் புன்முறுவல் இன்னிசைக்குச் சுருதிலயம் கதிருக்குச் செங்கமலம்-என் கண்ணுக்கு ஒளிநீயே! கடலுக்கு முழுநிலவு களிவண்டுக் குப்புதுப்பூ முடிவுக்கு மனச்சாந்தி-என் முயற்சிக்குப் பொருள்நீயே! வீணைக்கு மென்மைவிரல் வேய்ங்குழற்குப் பூங்காற்று கானுக்குத் தண்பசுமை-என் கவிதைக்கு உயிர்நீயே! ஆண்மைக்கு நிறைகருணை அறிவுக்குப் பேரடக்கம் மாண்புக்குப் பண்பாடு-என் வாழ்வுக்கு மணம்நீயே 258