பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூக்காரி



பூவொன்றும் வாங்கவில்லை;
பூவையுடன் பேசிடவே
நாவொன்றும் எழவில்லை;
நடுகல்லாய் நின்றிருந்தேன்.

சென்றவளை மீண்டுமினித்
தெருவழியே கண்பேனோ?
வென்றவளை வென்றுள்ளம்
மீட்டிங்கு வாழ்வேனோ?

செப்புத் தகட்டிற்குத்
தேன்மலரைத் தருவதுபோல்
ஒப்பித்தன் உளமென்றன்
உளத்திற்கா யீவாளோ?

32