பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரி

மணற்கோட்டை எத்தனையோ

 மனக்கோட்டை எத்தனையோ?

அணிற் பிள்ளை களைப்போல

 ஆடல்களும் எத்தனையோ?

கன்னிக் கவின் மாறாத

 காவிரிப் பூங் கவிப்பெண்ணே!

என்னென்ன நினைப்புகளோ

 என்னென்ன ஆசைகளோ

கொள்ளத் துணைபுரிந்தாய்;

 கூட்டின்பச் சுவையேறக்

கள்ளமிலா உள்ளங்கள்

 கலைந்திடவே நடம்புரிந்தாய்.

பத்துடனே ரைந்தாண்டு

 பறந்துவிட்ட பின்னரின்று

கத்துகுயிற் குழலிசையின்

 களியோங்க நடக்கின்ற

உன்றனைநான் காணவந்தேன்:

 உணர்ச்சியெலாம் மீண்டனவே. அன்றுகண்ட குமரியடீ 
 அதிலொன்றும் ஐயமில்லை,

நந்தா எழில் அரசீ

 நாணமுடன் உடல்வளைத்துச் சிந்தா முறுவலுடன்
 செல்கின்ருய் காவிரியே!
             34