இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காவிரி
மணற்கோட்டை எத்தனையோ
மனக்கோட்டை எத்தனையோ?
அணிற் பிள்ளை களைப்போல
ஆடல்களும் எத்தனையோ?
கன்னிக் கவின் மாறாத
காவிரிப் பூங் கவிப்பெண்ணே!
என்னென்ன நினைப்புகளோ
என்னென்ன ஆசைகளோ
கொள்ளத் துணைபுரிந்தாய்;
கூட்டின்பச் சுவையேறக்
கள்ளமிலா உள்ளங்கள்
கலைந்திடவே நடம்புரிந்தாய்.
பத்துடனே ரைந்தாண்டு
பறந்துவிட்ட பின்னரின்று
கத்துகுயிற் குழலிசையின்
களியோங்க நடக்கின்ற
உன்றனைநான் காணவந்தேன்:
உணர்ச்சியெலாம் மீண்டனவே. அன்றுகண்ட குமரியடீ அதிலொன்றும் ஐயமில்லை,
நந்தா எழில் அரசீ
நாணமுடன் உடல்வளைத்துச் சிந்தா முறுவலுடன் செல்கின்ருய் காவிரியே!
34