பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

திரு காமராஜ் உண்மைத் தியாகி!

“தன்னைத்தானே தூய்மைப் படுத்திக் கொள்பவனும், சுயமாகத் தியாகம் செய்யக் கூடியவனுமான இந்தியனே, தான் பிறந்த நாட்டுக்கு உற்ற துணையாக இருக்க முடியும்,” என்ற காந்தியத் தத்துவத்திற்கே ஓர் உண்மைத் தத்துவமாக விளங்கி வருபவர் திரு காமராஜர்

ஒத்துழையாமை, நாகபுரிக் கொடிப்போர், சைமன் எதிர்ப்பு, உப்பு அறப்போர் போன்ற பலதரப்பட்ட கட்டங்கள் அவரைச் சிறைப்படுத்தின. சிறையே அவரது தாய் நாட்டுக் கோயில்!

தெய்வத் தமிழ்மறை கூறுகிறது:

“கொடை அளி செங்கோல் குடிஓம்பல், நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி.”

கொடைத்தன்மை, காருண்யம், நடுநிலை ஆட்சி முறை, குடிகளைப் பேணல் போன்ற குல நலன்களைக் கைக்கொண்டவன் மற்ற அரசர்களுக்கு ஒளிபோன்றவன் என்ற வள்ளுவத்திற்கு வாய்த்த பிரதிநிதியாக இன்று இந்த ‘ஏழைப் பங்காளன் காமராஜர்’ திகழ்ந்து வருகிறார். கண்ணற்ற சேய்களாகத் திகழ்ந்த ஏழைப் பிள்ளைகளுக்குக் கண் கொடுத்து, கல்வி கொடுத்து, உணவு, உடை கொடுத்துக் காத்து வருகின்ற மனித தெய்வம் அவர். ‘நீதிநெறி விளக்கம்’ புகலும் அனைவருக்கும் தெய்வமான் இலைமுகப் பைபூண் இறை’யின் வடிவமாக விளங்குபவரும் இவரே! அரசியல் விழிப்புப் பெற்ற மக்களிடையே ஒன்றுபட்ட- உணர்ச்சி பூர்வமான ஐக்கியப் பான்மையைத் தழைக்கச் செய்து நாட்டையும் நாட்டுமக்களையும் குறித்தே சதா, சிந்தித்துச் செயற்பட்டுவரும் கர்மவீரரை இன்று தமிழகப் பொதுமக்கள் பூர்ணமாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். இதுவே அன்னாரது வெற்றி; அவரது நாட்டுப் பணியின் வெற்றி!