பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

9

“விதி விலக்கு; சட்ட விரோதமானது அப்படி என்றால் என்ன அப்பா?”

“சில குறிப்பிட்ட சாமான்களை, பயணிகள் சுங்க வரி செலுத்தாமல் கொண்டு செல்ல முடியாது, அதற்கு உரிய வரியைச் செலுத்தி எடுத்துச் செல்லலாம். அப்படியன்றி, தெரியாமலோ, முறையின்றியோ கொண்டு போனால் அதை சோதித்து, அதற்கு அபராத வரி விதித்து கட்டணம் வசூலிப்பார்கள். சில பொருட்களை எடுத்துச் செல்வது சட்ட விரோதமாகக் கருதப்படும். இப்படி இங்கு சோதனை செய்யும் உரிமை பெற்றவர்கள் இந்த சுங்க இலாக்கா அதிகாரிகள்,” என்று விளக்கினார் பரமகுரு.

“நாம் அப்படிப்பட்டவர்கள் இல்லையே!” பாபு லேசான கவலையோடு கேட்டான்.

“யார் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு அக்கறை இல்லை விமானத்திலுள்ள அத்தனை பயணிகளும் பத்திரமாக அவரவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். யாருக்கும், எவராலும், எந்தவித அபாயமும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை அல்லவா? அதற்காகவே ஒவ்வொரு பயணியின் உடமைகளும், உடலும், கவனமாய்ப் பரிசீலிக்கப்படுகின்றன” என்றார் பரமகுரு.

பின் எல்லாரும் விசாலமான அந்த விமானதளத்தில் இறங்கி நடந்தார்கள். அவர்களை